ஜெ.ஜெ.அரேன்ஞ்மெண்ட்ஸ்

logo

சாந்தி

திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பை பார்க்கலாம்.

திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும் . அதன் பயன்களும் வருமாறு:

உக்ரரத சாந்தி பூஜைகள். 59 முடிந்து 60 வயது ஆரம்பம்

ஒரு மனிதனுக்கு சராசரி வாழ்நாள் 120 வருடம் ஆகும். இதில் பாதி வயது 60 வருடங்கள் ஆகும். தன் பாதிவயதான 60 வயதில் தான் பல்வேறு கண்டங்கள் வந்து ஒரு மனிதனுடைய ஆயுளை குறைக்கும் என்பதால் அந்த கண்டங்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி இக்கோயிலுக்கு வந்து உக்ரரத சாந்தி செய்து தங்களுடைய ஆயுளை நீண்ட காலங்களுக்கு தொடர பூஜைகள் செய்வார்கள்.

இதை நாட்டு கோட்டை செட்டியார் வம்சத்தினர் தனது 59 வயது முடிவில் இக்கோவிலுக்கு வந்து உக்ரரத சாந்தி பூஜைகள் செய்து 60 வயது ஆரம்ப முதல் நாளில் அவர்கள் ஊர்களில் உணவு ஏற்பாடு செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் உணவு விருந்து அளிப்பார்கள்.

சஷ்டியப் பூர்த்தி

60 வயது முடிந்து 61 வது வயது தொடங்கும் முதல் நாளில் குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து செய்யக்கூடியவை இந்த சஷ்டியப் பூர்த்தி (60-வது திருமணம்) ஆகும். தன் தாய், தந்தையருடைய திருமணங்களை பிள்ளைகள் பார்த்து இருக்கமாட்டார்கள், அதனால் அவர்களுடைய மகள், மகன்கள் சேர்ந்து பெற்றோர்களுக்கு இந்த 60- வது திருமணம் செய்துவைப்பார்கள். இதனால் சகல செல்வங்களும் கிடைக்கக்கூடிய பலன்கள் உண்டாகும்..

பீமரத சாந்தி : 69 முடிந்து 70 வயது ஆரம்பம். விஜயரத சாந்தி : 75 வயது

தன் வாழ்வில் ஆரோக்கியம் மற்றும் திடமான உடல் கட்டமைப்பு, பீமனை போல் ஆயுள் பெற்று வாழ்வில் ஆரோக்கியமாக வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக இந்த பீமரத சாந்தி பூஜை செய்யப்படுகிறது.

சதாபிஷேகம் : 80 வயது ஆரம்பம்85 வயது முடிய

இந்த சதாபிஷேக திருமனம் ஆனது தன் பேரன்கள், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளுபேத்திகள். சேர்ந்து 80 வது வயதில் சதாபிஷேகம் (திருமணம்) செய்துவைக்கப்படுகிறது. இது குடும்ப விருத்திக்கு செய்யப்படுகிறது.

சதாபிஷேகத்திற்கு முதல் நாள் காலையில் ஏதாதச ருத்ரர்களாகிய மஹாதேவம், சிவம், ருத்ரன், சங்கரன், நீல லோகிதம், ஈசானம், விஜயம், பீமன், தேவதேவம், பவோத்பவம், ஆதித்யாகம் ஸ்ரீ ருத்ரன் என்று இவைகளை 11 கலசங்களில் ஆவானம் செய்து, விநாயக பூஜை செய்து மஹான்யாஸ ஜபத்துடன் பூர்வமாகத்த தொடங்கி 11 முறை ருத்ரத்ஸத் பாராணயம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை ருத்ரம் முடிந்தவுடன் ஒவ்வொரு ஏகாதசருத்ரர்களுக்கு தைலம், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பாயஸான்னம், தயிர், தேன், எலுமிச்சை, நார்த்தை பழங்கள், இளநீர், சந்தனம், பன்னீர் இப்படியாக 11 ருத்ரர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதே போல் மிளகுசாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், கல்கண்டு பொங்கல், பால்சாதம், தேங்காய் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், பாயசம், தயிர்சாதம், அதிரசம் முதலியன அபிஷேகம் ஆனபிறகு நைவேதயம் செய்ய வேண்டும். ஒருமுறை ருத்ரத்தினால் ஹோமம், பூர்ணாஹதி செய்து, தீபாராதனை செய்து தம்பதிகளுக்கு அந்த 11 கலச புனிதமான நீரை அபிஷேகம் செய்து அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

ருத்ர ஏகாதசினி மஹன்யாஸம் ஆரம்பித்து 11 முறை ஜெபம் செய்து ஸ்ரீ ருத்ரத்தினால் ஒருமுறை ஹோமம் செய்து, பிறகு வஸோர்த்தாரை சமகப் பிரச்னத்தினால் செய்ய வேண்டும். ஒரு ருத்ரஹோமம் செய்த பலன் 10 ஆயிரம் அஸ்வமேதமயாக பலனை கொடுக்கும். வியாதி நிவர்த்தியாகும். ஜீவனம் மேலோங்கும், சிந்தனை வளரும், மனச்சாந்தி உண்டாகும். நல்ல வாக்கு சாதுர்மும், ஆயுள் விருத்தியும், குழந்தை செல்வமும் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர ஹோமம்

இது ஒவ்வொரு மனிதர்களும் அன்றைய தினத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறார்களோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரத்தை தெரிந்துக்கொண்டு அன்றைய நாளில் பூஜைகள் செய்வதால் நன்மை உண்டாகும்.

ஆயுள் ஹோமம் : ஒரு வயது முதல் 100 வயது வரை

ஆயுள் விருத்திக்கு செய்யப்படும் பூஜைக்கு ஆயுள் ஹோமம் என்று பெயர். கால ஸ்வரூப செளரி சாந்தி or கனகாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விழாவானது ஆணின் வயது 90 எட்டும் பொழுது செய்யப்படுகிறது (தம்பதியர் சமேத). இதில் முக்கியமாக நல்ல உடல் நலம், மற்றும் மன நலம் ஆகியவற்றுருடன் 90வயதை எட்டுவது மிகச் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இவ்விழாவானது அவரவர் விருப்பம் போல் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யப்படுகிறது. இவ்விழாவின் போது ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்து பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பூர்ணா அபிஷேகம் 100 வயதில் செய்யப்படுகிறது. தான் கடந்து வந்த இந்த 100 வருட வாழ்க்கையில் சுக துக்கங்களை உறவினருடன் பகிர்ந்து நல்ல ஆயுளுடன் இருக்க வேண்டி செய்யப்படுகிறது.

அம்பாள் நட்சத்திரம்

ஸ்ரீ அபிராமி அம்பாள் அவதார நட்சத்திரம் ஆடி பூரம் நட்சத்திரம். இந்த நட்சத்திரமானது மார்கண்டேயர் நட்சத்திரம் தமிழ் மாதமான பங்குனியில் வரும் அஷ்வினி நட்சத்திரம் ஆகும்.

ஆயிரம் பிறை கண்டவர்கள்

ஒரு பெரியவர் 80 வயதை கடந்து விட்டால், அவர் பூரண வாழ்வு வாழ்ந்தாக கருதுகிறோம். அதாவது அவர் ஆயிரம் பிறை கண்டவர் என்று .கூறி அவரை வணங்குகிறோம். இத்தகைய சிறப்புப் பெற்றவர்கள் இத்தலத்துக்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்கிறார்கள். 80 வயது கடந்தவர்கள் வணங்கத் தக்கவர்கள் என்று பரமாத்மா கண்ணபிரான் கூறியுள்ளார்.

கிருஷ்ணர் தன் வாழ்நாளில், 80 வயதை கடந்தவர்களை கண்ட போதெல்லாம் வணங்கி வழிபட்டுள்ளார். அதை பிரதிபலிப்பது போல திருக்கடையூர் தலத்திலும் சதாபிஷேகம் செய்து கொள்ளும் பெரியவர்கள் காலில் எல்லாரும் விழுந்து ஆசி பெற்றுக் கொள்கிறார்கள்..

மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் இருதய நோய் விலகும்

அங்க பிரதட்சணம், கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர். இருதய சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் இத்தலத்தில் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் கண்டிப்பாக உயிர் பிழைக்கிறார்கள்..