ஜெ.ஜெ.அரேன்ஞ்மெண்ட்ஸ்

logo


ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலையம்

ஊர் பெயர்: திருக்கடையூர்
புராணப்பெயர்: திருகடவூர், வில்வவனம், பிஞ்சிலவனம், கடவூர்.
மூலவர்: ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்
உற்சவர்: கால சம்ஹார மூர்த்தி
அம்மன்: ஸ்ரீ அபிராமி அம்மன்
தலவிருட்சம்: வில்வம், ஜாதிமுல்லை.
தீர்த்தம்: அமிர்த புஷ்கரணி, கங்கா தீர்த்தம்
கோவில் பழமை : 1000 வருடம் முதல் 2000 வருடத்திற்கு முற்ப்பட்டது
கோவில் நடை (திறக்கும் நேரம்) : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை

  • திருக்கடையூர் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம், மற்றும் காவேரி தென்கரையில் அமைந்த 47வது இடமாக அமைய பெற்றிருக்கிறது. (out of 276).
  • நாயன்மார்களில் மூவரான அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தரால் பாடல் பதிகம் (தேவாரம்) பெற்ற ஸ்தலம்.
  • திருக்கடையூர் ”அட்ட வீரட்டதலமாகவும்”, சித்த பீடமாகவும் திகழ்கிறது.
  • 63 நாயன்மார்களில் காரி நாயனார் மற்றும் குங்கிலியக் கலிய நாயனார் ஆகிய இருவரும் திருக்கடையுரை பிறப்பிடமாக கொண்டவர்கள்.
  • அபிராமி அந்தாதி பதிகம் பாடிய பட்டரும் திருக்கடையுரைபிறப்பிடமாக கொண்டவர்.
  • கோவில் இராஜகோபுரம் மேற்கு நோக்கியும் ஐந்து (5) கோபுரங்களைம் கொண்டு காணப்படுகிறது. மற்றும் ராஜகோபுரம் ஏழு (7) நிலைகலை கொண்டதாக காணப்டுகிறது.
  • கும்பாபிஷேகம் கடந்த 26.03.1997 ஆம் ஆண்டு நடைபெற்றது.
  • இத்திருக்கோவில் தருமபுரம் ஆதினம் மயிலாடுதுறையின் கிழ் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
வரலாறு:

திருக்கடையூர் ஸ்தலம் அட்ட வீரட்டதலமாக போற்றப்படுகிறது அட்ட வீரட்ட தலம் சிவபெருமானின் வீரத்தை போற்றுவதாக காணப்பெறுகிறது
“அட்ட வீரட்ட தலம் “
அட்ட = எட்டு
வீரட்ட = வீரம், (எழுச்சி)
தலம்=இடம், (அமைவிடம்)
“திருக்கடையூர் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும் சிவன் யமனை வதைத்த இடமாகவும்”.

“காணப்பெறுகிறது “.

அட்ட வீரட்ட தலங்கள்
  • திருக்கடையூர் – மார்க்கண்டேயருக்காக கூற்றுவனை உதைத்த தலம்.
  • திருக்கோவிலூர் – அந்தகாசுரனை கொன்ற தலம்
  • திருவதிகை – திரிபுரத்தை நெத்தழித்த தலம்.
  • கீழபரசலூர் (or) திருப்பறியலூர் – தக்கனது தலையை துண்டித்த தலம்
  • திருவிற்குடி – சிலந்தாசுரனை தன் கால் பெருவிரலால் கீரியமைத்த சக்கரத்தினால் தலையரிந்த தலம்.
  • திருவழுவூர் – கயமுகாசுரனை (யானை) கொன்று அதன் தோலை உரித்து போர்த்திய தலம்.
  • திருகொற்க்கை – மன்மதனை எரித்த தலம்.
  • திருகண்டியூர் – சிவபெருமான் பிரம்மனது தருக்கினை அடக்க வேண்டி ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளிய இடம்.
கோவில் வரலாறு :
அமிர்தகடேஸ்வரர்

ஓர் சமயம் பிரம்மா சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற வேண்டி கைலாயம் சென்றார், சிவன் அவரிடம் வில்வ விதைகளை கொடுத்து பூலோகத்தில்(பூமி) விதைக்க அறிவுறுத்தினார், விதிக்கப்பட்ட விதை ஓர் நாழிகைக்குள் எங்கு மரமாக வளர்கிறதோ அவ்விடத்தில் ஞான உபதேசம் செய்வதாக கூறினார்.

வில்வ விதையானது இத்தலத்தில் ஓர் நாழிகைக்குள் மரமாக வளர்ந்து நின்றது. அதன்படி பிரம்மா இங்கு சிவனை வணங்கினார் சிவன் கூற்றுப்படி பிரம்மாவிற்கு இங்கு ஞான உபதேசம் செய்து வைத்தார், இவரே இங்கு மூலவராகவும் அருள் பாளிக்கிறார்.

பாற்கடலில் அமிர்தம் எடுத்து தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதை உண்ணச் சென்றனர். ஆகையால் விநாயகர் அதை மறைத்து வைத்துவிட்டார். பின்னர் விநாயகரை வணங்கிய தேவர்கள் அமிர்த கலசத்தை பெற்று வழிபடுவதற்காக வைத்தனர்.

அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில சுயம்புலிங்கம் உண்டானது, அமிர்தத்தில் இருந்து தோன்றியதால்.

அமிர்தகடேஸ்வரர்” என்றும் பெயர் பெற்றது.

கால சம்ஹரமூர்த்தி

கால சம்ஹரமூர்த்தி பெயர்க் காரணம் யாதெனில்
கால = காலன்(யமன்),
சம்ஹார = சம்ஹாரம் செய்தால்(அழித்தல்),
மூர்த்தி = சிவபெருமான்(அமிர்தகடேஸ்வரர்)

இறைவன் சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக யமனை சம்ஹாரம் செய்த தலம் அமிர்த கடேஸ்வரர் பெயர் காரணம்
அமிர்த = அமிர்தம்,
கடம் =பானை,
ஈஸ்வரர்= சிவபெருமான்

அமிர்ததில் இருந்து(பானையில்) வந்தமையால் அமிர்தகடேஸ்வரர் ஆயிற்று. மிருகண்டு முனிவர் – மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளைகள் இல்லை. ஆகையினால் மிருகண்டு முனிவர் கடுந்தவம் புரிந்தார். அதன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார் அதோடு அக்குழந்தை நிறைந்த அறிவோடும் குறைந்த ஆயுலோடும் இருக்கும் என்றும் வரம் அருளினார். இதனையடுத்து தனக்குப் பிறந்த குழந்தைக்கு மார்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். 16வயது வந்தவுடன் அவனின் ஆயுள் பற்றிய கவலை மிருகண்டு முனிவருக்கும் மருத்துவதிக்கும் ஏற்ப்பட்டது.

தன் பிறப்பில் உள்ள ரகசியத்தை தெரிந்து கொண்ட மார்கண்டேயன் சிவ தலங்களுக்கு சென்று வழிபடலானான். 107வது திருத்தலமாக திருக்கடையூரை அடைந்து ஈசனை வேண்டினான். அப்போது அவனது இறுதி நாளும் வந்தது

யமன் அவனுடைய உயிரை பறிக்க வந்தபோது மார்கண்டேயன் ஓடிச்சென்று சிவனை கட்டிக்கொண்டான். உடன் யமன் பாசக்கயிறை வீசினான், பாசக்கயிறு மார்கண்டேயனுடன் சேர்ந்து சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது.

உடன் சிவபெருமான் கோபம் கொண்டு என்னையும் சேர்த்தா இழுக்கிறாய் என கோபமுற்று காலனை(யமனை) எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார்.

அத்தோடு மார்கண்டேயனைப் பார்த்து நீ என்றும் பதினாறாய் சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று அருளினார்.

காலன் சம்ஹாரம் செய்யப்பட்டு விட்டதால் புவியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமாதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி சிவனிடம் முறையிட கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார்.

இத்திருத்தலத்தின் காலன் உயிர் இழந்ததும் பின்பு உயிர் பெற்றதும் இத்தலத்தில் தான்.

கால சம்ஹரமூர்த்தி என்ற பெயரில் இங்கு அருள்பாளிக்கிறார். இவர் தமது இடது காலில் ஆதிசேஷன் தலை மீது வைத்து இருக்கிறார்.

சாதரணமாக கால சம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும் போது எமனை பார்க்க இயலாது. பூஜை செய்யும் தருணத்தில் பீடத்தை திறக்கப்படும் அச்சமயத்தில் எமனை பார்க்க முடியும்.

எமன் இல்லாமல் காட்சி தருவதை சம்ஹார கோலமாகவும் எமனுடன் காட்சியளிப்பதை உயிர்ப்பரித்த கோலமாகவும் இங்கு காணலாம்.

ஒரே சமயத்தில் சம்ஹார மற்றும் அனுக்கிரக மூர்த்தியாகவும் இங்கு காணலாம்.

அபிராமி பட்டார் : (சுப்ரமணிய பட்டார்)

அபிராமி பட்டார் பிறந்த ஊர் ஆதலால் எப்போதும் அன்னை அபிராமி கோவிலுக்கு செல்வதையும் எப்போதும் அவள் நினைவாகவும் இருந்துவந்தார்.

ஓர் சமயம் சரபோஜி மன்னர் கோவிலுக்கு விஜயம் செய்தார் அச்சமயம் பட்டரும் கோவிலுக்குள் இருந்தார். மன்னர் பட்டரிடம் இன்று என்ன நாள் என வினவினார்.

பட்டரோ அபிராமியின் நினைவாக இருந்தமையால் அரசர் கேட்டதை அறியாமல் தவறாக அமாவாசைக்கு பதில் பௌர்ணமி திதி என்று கூறிவிட்டார்.

மன்னரோ கோபம் கொண்டு பவுர்ணமி என்பதை நிருபிக்காவிடில் மரண தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

பட்டர் உடன் அக்ணி வளர்த்து அம்பிகையை வேண்டி பதிகம்(அந்தாதி) பாடினார். அவர் 79வது பாடல் பாடியபோது அபிராமி அம்மன் தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறிய அது முழு நிலவாக காட்சி அளித்தது. மன்னர் பட்டரிடன் மன்னிப்பு கோரினார்.

தனித்துவம்
  • அபிராமி அந்தாதியில் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. அந்தாதி என்றால் பாடலின் கடைசி வரி அடுத்த பாடலின் முதல் வரியாக அமைய வேண்டும்.
  • உதிக்கின்ற செங்கதிர் என தொடங்கி
  • உதிக்கின்றனவே என முடிகிறது
தலபெருமை
  • இங்கு மூன்று தல தீர்த்தம் காணப்படுகிறது.
    1. அமிர்த புஷ்கரணி.
    2. கால தீர்த்தம்.
    3. மார்கண்டேய தீர்த்தம் .
  • திருக்கடையூர் பிஞ்சிலவனம் என்றும் அழைக்கப்படுகிறது. பிஞ்சிலம் – ஜாதிமல்லி, இந்த மலர் இறைவனுக்கு மட்டுமே சூடப்படுகிறது. அத்தோடு வருடம் முழுவதும் கிடைக்கப் பெறுகிறது. ஓர் பூவைக் கொண்டு செய்யும் பூஜையானது, 1008 அர்ச்சனை செய்வதற்க்கு(இறைவனுக்கு) சமமாக கருதப்படுகிறது. சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல் இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை திருக்கடையூர் ரகசியம் என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், அடுத்து சுவாமியையும் பின்பு யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
  • இத்தலத்தில் கால சம்ஹாரமூர்த்திக்கு நேர் எதிர் எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கியவாறு நிற்கிறார். அவரின் அருகாமையில் வாகனம் எருமையும் நிற்கிறது
  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். கருவறையில் இருக்கும் லிங்கம் பார்க்கையில் ஒன்று இருப்பது மட்டும் தெரியும் உற்று பார்க்கும் போது மட்டும் பின்னல் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும்
  • அமிர்தகடேஸ்வரலிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிற்றின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மட்டும் காண இயலும்
  • விநாயகரின் அறுபடை தலங்களில் இது மூன்றாவது தலம் ஆகும். விநாயகரின் அறுபடை வீடு :
    1. திருவண்ணாமலை - அல்லல்போம் விநாயகர்
    2. விருத்தாசலம் - ஆழத்துப் பிள்ளையார்
    3. திருக்கடவூர் - கள்ள வாரணப் பிள்ளையார்
    4. மதுரை - சித்தி விநாயகர்
    5. பிள்ளையார் பட்டி - கற்பக விநாயகர்
    6. திருநாரையூர் - பொள்ளாப் பிள்ளையார்
  • நவகிரகங்கள் இங்கு கிடையாது ஆகையால் கிரக சாந்தி செய்பவர்கள் கால சம்ஹார மூர்த்திக்கு செய்கிறார்கள்
  • இத்தலத்தின் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வழிப்பட்ட புண்ணியகரேஸ்வரர் ஆவர்
  • அருணகிரிநாதரால் முருகப்பெருமானுக்கு திருப்புகழ் பாடப்பெற்றத்தலம்
  • கள்ள வாரண விநாயகருக்கு அறுபடை வீடுகளின் இது மூன்றாவதாகவும், தேவாரப் பாடல் பெற்ற 274சிவாலயங்களில் இது 110வது தாகவும், அம்மனின் 51சக்தி பீடமாகவும் ஒன்றாகவும் திகழ்கிறது
  • காலன்(எமன்) பயம் போக வேண்டி தொழ வேண்டிய தலங்களுள் திருக்கடையூர் முதலாவதாக உள்ளது மற்ற கோயில்கள்
    1. திருக்கடையூர்
    2. திருவிழிமழலை
    3. திருவையாறு
    4. திருவேற்காடு
    5. திருவைக்காவூர்
    6. திருவாஞ்சியம்
  • மூலவர்களாக அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனும் தல மூர்த்திகளாக கள்ள விநாயகர், சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாமி, மகாலஷ்மி, வில்வவனேஸ்வரர், குரு(தஷ்ணாமூர்த்தி), (பிச்சாண்டவர்), பஞ்சபூத லிங்கங்கள், மார்கண்டேயர், அகஸ்தியர், 63நாயன்மார்கள், சப்த கண்ணிகள், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் இத்திருத்தலத்தில் அருள்பாளிக்கின்றனர்.
  • தல மூர்த்திகள்

    மூலவர்களாக அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனும் தல மூர்த்திகளாக கள்ள விநாயகர், சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாமி, மகாலஷ்மி, வில்வவனேஸ்வரர், குரு(தஷ்ணாமூர்த்தி) பிட்சாண்டவர், பஞ்சபூதலிங்கள், மார்கண்டேயர், அகஸ்தியர், 63நாயன்மார்கள், சப்த கண்ணிகள், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் தைதலத்தில் அருள்பாளிக்கின்றனர்.

திருவிழா:
  • எம சங்காரம் – (எம சம்ஹாரம்) – சித்திரை மாதம், 18நாட்கள், மகம் நட்சத்திரம்.
  • கார்த்திகை சோமவாரம் சங்கு அபிஷேகம் – 1008.
  • ஆடி பூரம் மற்றும் ஐப்பசி கந்த சஷ்டிகவசம்.
  • மஹா சிவராத்திரி, பங்குனி உத்திரம்.
  • தை மாதம் பொளர்ணமி அன்று அந்தாதி பாராயணம்.
  • தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ நாட்கள்.
Travel Information

சென்னை to திருக்கடையூர் 264km.

  • பிராத்தனைகள் :-இக்கோவிலின் மிக முக்கியமான நிகழ்வாக
  • சஷ்டியப்தப்பூர்த்தி, உக்ரரதசாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், மணி விழா, ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற தலம் ஆகும்.
  • 60 வது மற்றும் 61வது வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தப்பூர்த்தி பூஜை செய்கிறார்கள்
  • 70வது வயது மற்றும் 71வது வயது தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள்
  • 80வது வயதில் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்
  • 60வயது பூர்த்தியாகி தமிழ் வருடம் மற்றும் மாதம் கணக்கில் கொண்டு சஷ்டியப்தப்பூர்த்தி(மணி விழா) செய்து கொள்கிறார்கள்.